பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK

அஸ்ஸலாமு அலைக்கும் FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம். இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும். ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின் நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும் நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும் உங்களுக்கும் கிடைத்து விடும். “நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்தால் அந்த நன்மை இருக்கும் காலம் எல்லாம் அந்த நன்மை அவருக்கு கிடைகும் யார் ஒரு தீமையை ஆரம்பித்து வைத்தால் அந்த தீமை இருக்கும் காலம் எல்லாம் அவருக்கு அந்த தீமை கிடைக்கும்” எனும் கருத்து பட கூறினார்கள் எனவே FACE BOOK மூலம் நல்லவற்றை மட்டும் இன்ஸா அல்லாஹ் செய்யுங்கள்.

No comments:

Post a Comment