மரணம் பயம் அல்ல; அஃது ஒரு பயணம்


இரவும் பகலும் மாறும்
          இறைவன் வகுத்த நியதி
வரவும் செலவும் சேரும்
          வணிகக் கணக்கின் நியதி
இரவு மட்டு மிருந்தால்
         இயங்க மறுக்கு முலகம்
வரவு மட்டு மிருந்தால்
       வணிக வளர்ச்சி விலகும்


உறவும் பிரிவு மிணைந்து
        ஊடல்; காதல் கலந்து
பிறப்பின் முடிவி லுறவைப்
         பிரியு முயிரும் பறந்து
இறப்பின் மூலம் சென்று
        இறையைக் காண; மீண்டும்
பிறந்து மறுமை வாழ்வும்
       பின்னால் தொடர வேண்டும்

No comments:

Post a Comment