கற்பா? கல்லூரியா?





நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள்
குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.

குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறிகொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்
சிலர் தங்களது பருவடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோ அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தை களை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுகள்.
பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாய பெண்கள் வெளியே வருகின்றனர். வாசலில் ஆட்டோவுடன் காத்தி ருக்கின்றான் ஆட்டோ ஒட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமல் கலர் கலர் பேண்ட சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங் களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகிறது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்றவரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான். மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பிள்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை.

மறுநாள் காலையில் அதே சொகுசு பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்த கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேண் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டி ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப்புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்புக் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தைகெட்ட நடத்துனர்களும், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.
பட்டபடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டி பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சி குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று.

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப்பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகை யிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றொர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

ஊயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்வி விட்டு, பாய் பிரண்ட்ஸ்வுடன் திரையரங்களுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின் றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக்களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதை காமகளியாட்டம் என்று வெறுக்கின்றர்களோ அதை தற்போதுள்ள சினிமாக் களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும். கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நிணைப்போம். இப்போது நிணைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்
கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத் துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பறிக்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வர்று கூறுகையில் நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடியப் பாவமாகும்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்
இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! நம்முடைய பிள்ளைகளை நரகபடு குழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.
தமிழகத்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஒடுவது சர்வசாதாரணமான ஒன்றாகி விட்டது.
பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர். பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர். பள்ளிப்படிப்புக்கே இந்த கதி என்றால் கல்லூரிப் படிப்புக்கு என்ன கதி?
ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பென்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜூகேஷன் முறையை கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாய பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும்; இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது வல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாய பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின் றனர். சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்பு கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும்போது சாதகங்களை விட பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளை படிக்க வைக்க வேண்டுமானால்….
குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

உள்ளுராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லுஸரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) தப்ரானி)

இந்த பெண்கள் ஆட்டோ அல்லது வேளில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர் களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்புப் படித்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதை விட சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாகரத்தில் போய் முடிகின்றது.
எனவே, இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்த தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களை பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கன் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கி விடக்கூடாது.இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்துக் கொண்டிருப்பவை. இந்த தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி: 


இப்படிக்கு துல்கர் இனயம்

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் கொஞ்சம் பாருங்கள்????? நாம் யார் ?????


வழமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்...!
வறுமை என்ற சுனாமியால் அரபிக் கடல்ஓரம் ஒதிங்கிய நடை பிணங்கள்...!
வறுமை எனும் சூறாவளியில், இளமையை பறிகொடுத்த பறவைகள்..!
தொலைதூரத்தில் இருந்து போன்-ல் குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்...!
கடிதத்தை பிரித்த உடன் கண்ணிர்துளிகளால் காணல் நீராகிப்போகும் மணைவி எழுதியவைகள்...!
இன்டர்நெட்டில் இல்லறம் நடத்தும் இன்பம் துளைதவர்கள்...!
நலம் நலமறிய ஆவல் என்றால், பணம் பணமறிய ஆவல் என்று அறிந்தவகள்...!
எ/சி காற்றில் மணைவியின் சுவாச காற்றை சுவாசிக்க தவறியவர்கள்...!
குழந்தைகளை கொஞ்ச முடியாத மனசுமைகாரர்கள்...!
தனிமையில் உறங்கும்போது கண்ணீர்சிந்தி இளமையை துளைதவர்கள்...!
உழைப்பு என்ற வார்த்தையை உல் உணர்ந்தவர்கள்...!                   முடியும்வரை உழைத்து, உதிர்ந்தபின் வீடு திரும்பும் நோயாளிகள்...!
குடும்பத்திற்காக பாளைவனத்தில் கருகி, ஓலி கொடுக்கும் தியாகிகள்...! 


நன்றி          

 

 இப்படிக்கு துல்கர் இனயம் 

யாரும் தப்ப முடியாது?


” 
*வானவருடன் ஓர் உரையாடல்* 

மரணம், ஒரு மனிதனின் படுக்கையறையின் கதவைத் தட்டியது. 

  “யாரது?” என்று தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் உரத்தக்குரலில் 
கேட்டான். 

  “நான் தான் இஸ்ராயீல்; என்னை உள்ளே விடு” என்று வானவர் இஸ்ராயீல் 
(அலை) கதவிற்கப்பால் கூறினார்கள். 

  உடனே அந்த மனிதன் கடும் விஷக்காய்ச்சலால் கட்டுண்டவன் போல் நடுங்க 
ஆரம்பித்தான். அருகிலிருந்த தன் மனைவியிடம் கத்த ஆரம்பித்தான். 

  “என்னைக் காப்பாற்று. அந்த வானவரிடம் என் உயிரைப் பறிக்க விடாதே” 
என்று பேத்த ஆரம்பித்தான். 

  உயிரைப் பறிக்க வந்த வானவர் இஸ்ராயீலிடம் “நான் இன்னும் மரணத்திற்குத் தயாராகவில்லை; என் குடும்பம் என்னை நம்பியிருக்கிறது; எனக்கு சற்று அவகாசம் கொடு. சில காலம் என்னை விட்டு விடு” என்று கதறிக் கொண்டே இருந்தான். 

பெரும் சத்தத்துடன் கதவு தட்டப்பட்டது. “மனிதனே! நானாக வரவில்லை. எனக்கு உன் ஆத்மா தான் வேண்டும்” என்று இஸ்ராயீல் மீண்டும் கதவித் தட்டினார். 

  “மனிதனே! என்னை உள்ளே விடு! படுக்கையிலிருந்து எழு! நீ கதவைத் 
திறக்கா விட்டாலும் எனக்கு உள்ளே வரத்தெரியும்.” என்று உள்ளே அடி எடுத்து 
வைத்தார் இஸ்ராயீல். 

  அவரைக் கண்ட்தும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த மனிதன் கையில் 
துப்பாக்கியை எடுத்து நீட்டினான். 

  “உள்ளே வராதே! உன்னைச் சுட்டுவிடுவேன். உன்னைக் கொன்று விடுவேன்” 
என்று உள்ளே வந்து கொண்டிருந்த இஸ்ராயீலுக்கு முன்னால் துப்பாக்கியை 
நீட்டினான். 

 மனிதனை நோக்கிய வானவர், “அட மனிதனா! நானாக வரவில்லை. இறைவனின் கட்டளைப்படி நான் வந்திருக்கிறேன். உன்னுடைய கடைசிப் பயணத்திற்கு தயாராகு! 
மூடனே! எதற்குப் பயப்படுகிறாய். வானவர்களகிய எங்களுக்கு மரணமில்லை. 
துப்பாக்கியை மடக்கு. மேல் மூச்சு வாங்காதே! என்று வானவர் இஸ்ராயீல் தெளிவாகச் சொன்னவுடன் மனிதன் வெட்கத்தால் தலை குனிந்தான். 

  மனிதன் இப்பொழுது பரிதாபமான குரலில் கெஞ்சத் தொடங்கினான். “என் வாழ்நாளில் அல்லாஹ்வை நினைக்க நேரமில்லை. சூரியன் உதயமானதிலிருந்து இரவு வரை நான் பணம் சம்பாதிப்பதிலேயே நேரத்தைக் கழித்தேன். 

  “என்னுடைய ஆன்மவைப் பற்றி நினைக்கவே இல்லை. இறைவனின் கட்டளைக்கு அடிபணியவில்லை. ஐந்து வேளை தொழவுமில்லை. ஹஜ்ஜுக்குப் போக பணம் இருந்தும் பணத்தைச் செலவழிக்க மனமில்லாமல் ஹஜ்ஜுக்குப் போகவுமில்லை. யாருக்கும் தானதர்மம் செய்யவுமில்லை. வட்டி வாங்கித் தின்று கொண்டிருந்தேன். சில வேளைகளில் மது அருந்தினேன். தீய பெண்களுடன் தொடர்பு கொண்டேன். ரமலானில் நோன்பிருக்க வில்லை. 
வீணாக என் வாழ்நாளைக் கழித்து விட்டேன்.” 

  “வானவரே! எனக்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகள் தவணை கொடு. என்னை 
விட்டுவிடு. நீ எனக்கு கொஞ்சம் அவகாசம் அளித்தால் அதில் திருக்குரானின் 
கட்டளைகளைப் பேணிக் காப்பேன். இறைவனைத்துதித்து ஐவேளையும் தொழுவேன். ரமலான் மாத்த்தில் நோன்பு வைப்பேன். வட்டி வாங்கித் திண்ணமாட்டேன். ஆகாத பெண்களிடம் சேர மாட்டேன். ஓரிறைவனையே நான் துதிப்பேன்” என்று கதறிக் கதறி அழுது புலம்பினான். 

  வானவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “மனிதனே! 
நாங்கள் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைத் தான் செய்ய முடியும். இறைவனுக்கு மாறு செய்ய மாட்டோம். மரணம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. மனிதனே! இதோ உன்னுடைய நேரம் வந்து விட்டது. நீ தயார்ஆகி விடு! உன்னுடைய அச்சம் எனக்குப் புரிகிறது! 
ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அழுது புலம்பி பயனில்லை. 

  எத்துனை ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தாய்! நீ தாய் தந்தையை 
மதிக்கவில்லை. அவர்களை ஆதரவற்றவர்களாய் விட்டு விட்டு ஓடிவிட்டாய். மக்களை மார்க்க அடிப்படையில் போற்றி வளர்க்கவில்லை. மஸ்ஜிதில் தொழுகைக்குப் பாங்கு சொல்லும் போது நீ அசட்டையாக இருந்தாய்! திருக்குரானை நீ ஓதவுமில்லை. அதன் அறிவுரைகளை அறியவுமில்லை. வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்தாய். சூதாட்டமும், விபச்சாரமும் உன் பொழுது போக்குகள். சாப்பிட்டு சாப்பிட்டு உடலைக் கொழுக்கச் செய்தாய். நோயுற்ற மனிதர்களைப் பார்க்கவும் உனக்குப் பிடிக்காது. சிறிய தொகையைக் கூட நன்கொடையாக்க் கொடுத்த்தில்லை. ஏழைகளுக்கு உணவளிப்பது உனக்குப் 
பிடிக்காத விஷயம். நீயோ, நான் தான் அதிபுத்திசாலி, பராக்கிரமசாலி என்று பெருமித்த்தில் இருந்தாய். உனக்கு சொர்க்கத்தில் நுழையும் நற்பேறு உண்டா என்று எனக்குத் தெரியாது. நம்பிக்கை கொள்ளாதவர் நரகத்துக்குத் தான் செல்வர். உனக்கு இனி அவகாசமில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் கடமையைச் செய்தார் இஸ்ராயீல். 

நன்றி : . 




 இப்படிக்கு துல்கர் இனயம் 



اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ 
حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! 
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” 


மன ஊனமில்லா மணமகன் தேவை



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மன ஊனமில்லா மணமகன் தேவை
...
‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு

மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல

நீ கொடுக்க வேண்டிய மஹரை

பெண்ணான என்னிடம் கேட்க

நீ கேட்ட மஹரை கொடுக்க

என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்

தன் அனைத்து சுகங்களையும் இழந்து!


என்னைப் பார்க்க வந்த

உன் தாயும், உன் சகோதரியும்

பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்

என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்

வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து

எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்

நீங்கள் தெளிவாக சொன்னால்தான்

அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!


உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்

பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து

ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்

எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய

எத்தனை பேருக்கு பசியாற தருவிய!

(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)


மனை உள்ளது வீட்டை

கட்டி கொடுத்து விடுங்கள்!

(தற்பொழுது குடிசைதான் வீடாம்)

என் குடும்ப சூழ்நிலையில்

இந்த சம்பந்தம் அமையுமா

மணமேடையில் அமருவோமா

என்று மனதுக்குள் அழ!


என் தந்தையோ நோயின்

வாசல்படியை தட்ட

நானோ வீட்டின் நிலைப்படியில்!

எத்தனையோ பேர் என்னை

பெண் பார்த்து சென்ற பிறகும்

இன்னும் முதிர் கன்னியாக

உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!

ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!


பெண் பார்க்க

வந்தவர்களில் சிலர்

என் பையன் சிகப்பு பெண்தான்

பார்க்க சொல்கிறான்

பெண் கருப்புதான்

இருந்தாலும் நாங்கள் கேட்பதை

(வரதட்சனையை) தந்து விட்டால்

என் பையனை

சம்மதிக்க வைத்து விடுகிறோம்!

பணம் படைத்தவர்களின்

கருப்பு நிற பெண் கரையேறி விடும்!

பணம் இல்லா குடும்பத்து

கருப்பு நிற பெண்களை

கடலில் தள்ளி விடலாமா?



பெண்ணை பெற்றவன்

ஜமாத்தில் லட்டர் வாங்கி

ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்

என்று முகம் தெரியா ஊரில்

பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்

பாவா குமராளி வந்திருக்கிறேன்

திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது

உதவி செய்யுங்கள் என்று

துண்டை ஏந்தி நிற்பதை

பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்

கோபம் வரவில்லையா?

என்ன செய்தாய் நீ?

என் தாய் தந்தை மனம்

கோணாமல் நடப்பேன் என்றாய்!


இளைஞனே திருமணம் முடிக்கும்

நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்

மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்

இதுநாள்வரை தாய், தந்தை

பேச்சைகேட்காத நீ கூட திருமண

பேச்சு வார்த்தையில் மட்டும்

என் தாய் தந்தையின் மனம்

நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!


இளைஞனே உன் தெருவில்

திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க

நீயோ பணம் படைத்த வீட்டில்

பெண்ணை தேட!

அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு

வேற வழி இல்லை என்று

பிறமத பையனோடு ஓட!

இப்பொழு வருகிறது உனக்கு கோபம்

என் தெரு பெண்எப்படி ஓடலாம்!

அவளை கண்டால் வெட்டுவேன் என்று!

அவள் ஓடியதற்கு நீயும்

உன்னை போன்றவர்களும்

காரணம் இல்லையா?


முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்

நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு

பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு

கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை

என்ற பெயரில் மணமகள் வீட்டில்

மனசாட்சியும் இல்லை!

மறுமை பயமும் இல்லை உனக்கு!


மணமகனே நான்

உன்னிடம் கேட்கிறேன்

நீ என்ன மஹர் தருவாய்

எனக்கு - எதற்காக என்கிறாயா?

உன் வீட்டில் வந்து

ஆயுள் முழுவதும் உனக்கும்

உன் குடும்பத்திற்கும்

சேவை செய்வதற்கும்!

குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!

உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்

நானும் தகப்பன் என்று

பெருமிதம் அடைவதற்காக!

என் தாய் தந்தையை

என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை

நான் வாழ்ந்த இடத்தையே

விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்

வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு

வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?


இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!

உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்

விழித்தெழுங்கள்!

இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்

நாளை மஹ்ஷர் பெருவெளியில்

இறுதி தீர்ப்பின் நாளின்

அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்

என்ன பதில் சொல்வாய்

தாய் தந்தையை கை காட்டுவாயா?

முடியாது இளைஞர்களே!


நீங்கள் மட்டும்தான் உங்களின்

காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்

வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து

நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்

இந்த வரதட்சனை என்னும் கொடுமையை

அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு

மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!

இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மன ஊனமில்லா மணமகன் தேவை
...
‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு

மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல

நீ கொடுக்க வேண்டிய மஹரை

பெண்ணான என்னிடம் கேட்க

நீ கேட்ட மஹரை கொடுக்க

என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்

தன் அனைத்து சுகங்களையும் இழந்து!


என்னைப் பார்க்க வந்த

உன் தாயும், உன் சகோதரியும்

பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்

என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்

வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து

எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்

நீங்கள் தெளிவாக சொன்னால்தான்

அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!


உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்

பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து

ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்

எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய

எத்தனை பேருக்கு பசியாற தருவிய!

(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)


மனை உள்ளது வீட்டை

கட்டி கொடுத்து விடுங்கள்!

(தற்பொழுது குடிசைதான் வீடாம்)

என் குடும்ப சூழ்நிலையில்

இந்த சம்பந்தம் அமையுமா

மணமேடையில் அமருவோமா

என்று மனதுக்குள் அழ!


என் தந்தையோ நோயின்

வாசல்படியை தட்ட

நானோ வீட்டின் நிலைப்படியில்!

எத்தனையோ பேர் என்னை

பெண் பார்த்து சென்ற பிறகும்

இன்னும் முதிர் கன்னியாக

உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!

ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!


பெண் பார்க்க

வந்தவர்களில் சிலர்

என் பையன் சிகப்பு பெண்தான்

பார்க்க சொல்கிறான்

பெண் கருப்புதான்

இருந்தாலும் நாங்கள் கேட்பதை

(வரதட்சனையை) தந்து விட்டால்

என் பையனை

சம்மதிக்க வைத்து விடுகிறோம்!

பணம் படைத்தவர்களின்

கருப்பு நிற பெண் கரையேறி விடும்!

பணம் இல்லா குடும்பத்து

கருப்பு நிற பெண்களை

கடலில் தள்ளி விடலாமா?



பெண்ணை பெற்றவன்

ஜமாத்தில் லட்டர் வாங்கி

ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்

என்று முகம் தெரியா ஊரில்

பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்

பாவா குமராளி வந்திருக்கிறேன்

திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது

உதவி செய்யுங்கள் என்று

துண்டை ஏந்தி நிற்பதை

பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்

கோபம் வரவில்லையா?

என்ன செய்தாய் நீ?

என் தாய் தந்தை மனம்

கோணாமல் நடப்பேன் என்றாய்!


இளைஞனே திருமணம் முடிக்கும்

நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்

மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்

இதுநாள்வரை தாய், தந்தை

பேச்சைகேட்காத நீ கூட திருமண

பேச்சு வார்த்தையில் மட்டும்

என் தாய் தந்தையின் மனம்

நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!


இளைஞனே உன் தெருவில்

திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க

நீயோ பணம் படைத்த வீட்டில்

பெண்ணை தேட!

அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு

வேற வழி இல்லை என்று

பிறமத பையனோடு ஓட!

இப்பொழு வருகிறது உனக்கு கோபம்

என் தெரு பெண்எப்படி ஓடலாம்!

அவளை கண்டால் வெட்டுவேன் என்று!

அவள் ஓடியதற்கு நீயும்

உன்னை போன்றவர்களும்

காரணம் இல்லையா?


முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்

நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு

பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு

கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை

என்ற பெயரில் மணமகள் வீட்டில்

மனசாட்சியும் இல்லை!

மறுமை பயமும் இல்லை உனக்கு!


மணமகனே நான்

உன்னிடம் கேட்கிறேன்

நீ என்ன மஹர் தருவாய்

எனக்கு - எதற்காக என்கிறாயா?

உன் வீட்டில் வந்து

ஆயுள் முழுவதும் உனக்கும்

உன் குடும்பத்திற்கும்

சேவை செய்வதற்கும்!

குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!

உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்

நானும் தகப்பன் என்று

பெருமிதம் அடைவதற்காக!

என் தாய் தந்தையை

என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை

நான் வாழ்ந்த இடத்தையே

விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்

வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு

வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?


இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!

உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்

விழித்தெழுங்கள்!

இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்

நாளை மஹ்ஷர் பெருவெளியில்

இறுதி தீர்ப்பின் நாளின்

அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்

என்ன பதில் சொல்வாய்

தாய் தந்தையை கை காட்டுவாயா?

முடியாது இளைஞர்களே!


நீங்கள் மட்டும்தான் உங்களின்

காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்

வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து

நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்

இந்த வரதட்சனை என்னும் கொடுமையை

அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு

மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!

இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.    
                                     

பயணிகளின் மேலான கவனத்திற்கு !


அஸ்ஸலாமு அலைக்கும் ...
என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 
ஏறும் இடம் (Departure ) : துணியா !  
 இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம் அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 
ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 
ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !
உஷார் !
 உஷார் !
உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல நல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.
சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 
இன்ஷா  அல்லாஹ் !. 
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
"எங்கள் இறைவா ! உன்மீது  ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்பாயக"
அஸ்ஸலாமு அலைக்கும் ...
என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 
ஏறும் இடம் (Departure ) : துணியா !  
 இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம் அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 
ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 
ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !
உஷார் !
 உஷார் !
உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல நல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.
சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 
இன்ஷா  அல்லாஹ் !. 
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
"எங்கள் இறைவா ! உன்மீது  ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்பாயக"
அஸ்ஸலாமு அலைக்கும் ...
என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 
ஏறும் இடம் (Departure ) : துணியா !  
 இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம் அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 
ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 
ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !
உஷார் !
 உஷார் !
உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல நல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.
சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 
இன்ஷா  அல்லாஹ் !. 
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
"எங்கள் இறைவா ! உன்மீது  ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்பாயக"          
                                                          நன்றி                                      இப்படிக்கு துல்கர் இனயம்