மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!!

(எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!
(அவ்வாறன்றி) அவர் அப்படி சொல்லியிருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது எனும் ஆதாரமற்ற கூற்றுக்களைக் கண்டு, மருண்டு விடாதீர்கள்? (எவர் எப்படிச் சொன்னாலும், எதிலும் எப்படி சொல்லப்பட்டிருப்பதாலும் சரி) அல்லாஹ் (தமது வேதத்தில் இப்படித் தானே) கூறுகிறான்: நமது தூதர் உங்களிடம் கொண்டு வந்தவற்றைக் கடைபிடித்து, உங்களை விட்டும் தடுத்தவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் (59:7)

குறைபாடு, அபாயம் முதலியவற்றிலிருந்து, பாதுகாப்பான நிலை, குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே இருக்கிறது. இவையல்லாதவற்றில் நாசம் தானிருக்கின்றன. இவ்விரண்டினைக் கொண்டே ஓர் அடியான் இறைநேசன் எனும் உயர்பதவி அடையமுடியும். ஃபுதூஹுல்கைப் (சொற்பொழிவு – 36)

மேற்காணும் தமது போதனைக்கு சான்றான, அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள், குர்ஆனின் (59:7) திருவசனத்தை மேற்கோள்காட்டி, இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே குர்ஆனையும், ஹதீஸையும் தமது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு, வாழந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள், ஏதோ அல்லாஹ் அவர்களிடத்தில் பாதுகாப்பு இலாக்காவை பரிபூரணமாக ஒப்படைத்துவிட்டு, எவரும் பாதுகாப்புக்காக, என்னை அணுக வேண்டாம், தேவையான பாதுகாப்புகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக, அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஆகவே அனைவரும் தமக்கு ஆபத்துகள் நிகழும்போது, அவர்களையே “யாமுஹ்யத்தீன்” என்று அழைத்து, அனைத்து காரியங்களையும் அவரே வைத்தே பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஓய்வு எடுக்கப்போகிறேன்” என்று கூறியிருப்பதுபோல், கருதிக்கொண்டு அல்லாஹ்வையும், குர்ஆனையும் அடியோடு ஒதுக்கிவிட்டு ஏன் அப்துல்காதீர் ஜீலானி(ரஹ்) அவர்களின் போதனையைக்கூட சிறிதும் மதிக்காது, அப்பட்டமான வழிகேட்டில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்தகையோருக்கு அவர்களின் அரும்போதனைகள்:

உமக்கேற்படும், எக்கஷ்டத்தையும், அல்லாஹ்வன்றி மற்றவரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம். ஏனெனில் , அல்லாஹ்(அல்குர்ஆனில்) கூறுகிறான்; அல்லாஹ் உம்மை ஒரு கஷ்டத்தில் மாட்டி வைத்துவிட்டால், அவனன்றி உம்மை அதிலிருந்து விடுவிப்போர் அறவே கிடையாது (10:107) (ஃபத்ஹுர்ரப்பானீ)

மக்களிடம், அப்துல் காதிர்ஜீலானி(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுர் ரப்பானி எனும் அவர்களின் நூலில் திருகுர்ஆனில் ஒரு வசனத்தையும் சான்று காட்டி, கஷ்டம் ஏற்படும் போது, அல்லாஹ் ஒருவனையே அழைத்து அவனிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார்கள் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், அதெல்லாம் சரி……

“ஆகாயத்திற்கு மேலிருந்து கொண்டோ, அல்லது ஆழ்கடலின் அடியிலிருந்து கொண்டோ, ஆபத்து வரும் யாரும் என்னை அழைத்தால் நான் வந்து ஆஜராகி, அவர்களைக் காப்பாற்றுவேன்” என்று ஒரு பைத்து, அவர்களே சொல்லியிருப்பதாக கிதாபுகளில் காணப்படுகிறது. என்று கதையளக்குகிறார்கள்.

இத்தகைய “கால, கீல” (அவர் அப்படி சொல்லியிருக்கின்றார் இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது) என்பன போன்ற ஆதாரமற்ற கூற்றுக்களைத்தான் கண்டு மருண்டு விட வேண்டாம் என்று அவர்கள் தமது போதனையில் கூறி அவற்றை ஆணித்தரமாக அடித்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதை சிந்திப்பார்களாக! 

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள்,

மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய

காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக

சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக

இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல

பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்

நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.



மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு

பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது

என்பதை இக்கட்டுரையில் காண்போம்.



குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்

வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்

கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய

நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன்

இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை

ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



பொது இடங்களில் காமிராக்கள் :



பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்

நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும்

பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து

இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்

கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல

குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில்

வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப்

அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும்.

பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய

விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக

இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.



பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :



பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின்

அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள்

எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்

செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால்

படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று

சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்

இருக்கவும்.



பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :



பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக்

குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும்

வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு

ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள

அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும்

காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று

நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல்

தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு

பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.



மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :



மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக

செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.

மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும்,

ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும்

கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்

பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்,

மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை

உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள்

அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.



இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி

என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து

தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி

மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து,

வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை

செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த

குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள்

இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.



ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க

துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய

விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.



துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு

பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :



நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப்

போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய

கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின்

உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்

பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு

கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப்

பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள்

களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று

பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப்

பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை

மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை

என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த

கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு

இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது.

கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு

வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.

ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த

பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்

காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம்

மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை

மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம்

காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது

தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு

செயல்படவும்.



நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து

மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும்

கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி

வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான்

என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்

சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம்

சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு

எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும். 

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு

3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன 
அபிசேகம்

4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்

7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு

8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம்
 மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.

29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்
.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.

33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.



இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ?
 சடங்குகள் !