மரணம்


ஒரு நாள் வரும், அன்று

நீ குளிக்க மாட்டாய்
உன்னை குளிப்பாட்டுவார்கள்.

...நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.

நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.

நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான் மௌவுத் (மரணம் )

"அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது''

No comments:

Post a Comment