தொழகையை விட்ட என் சகோதரனே

தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக
ருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்
கொண்டிருக்கின்றாய்? உன்னை படைத்து உணவுளித்து இரட்சித்துக்
கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம்
இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு
நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும்
இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே வேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும்
படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற
பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்து பார்க்க
அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற
ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து
விட்டானோ? உன் மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில்
குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்ட மிட்டிருக்கிறானோ?

நீ அவனை சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போ
தென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம்.
அந்த நாள் வந்துவிட்டாள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உன்னால்
முடியாது? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா?
முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை
விட்டுச் செல்லும் போது உனக்கு வழிதுனையாக வருவது எது?
துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது?
உனது பனமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா?
எதுவுமேயில்லை- ஒரேயொன்றைத் தவிர. அதுதான் நீ செய்த
நல்லமல்கள். நீ புரிந்து தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள்
அதைதான் நீ உலகில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய்,
உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை
நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே!
அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனை
பயந்து உன்விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காக பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?
உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்கென
பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருப்போதும்
நடக்காது.... நடக்கவும் முடியாது....


என் அருமைச் சகோதரனே! நிச்சயமாக மரணம் வரும். நீ என்றோ
ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையை பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்ட்டத்திற்கும்,
கை சேதத்திற்குமுறியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி
வரவேற்ப்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுதப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம்
சிந்தித்து பார்த்தாயா?

போதும் நன்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம்
துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது;
அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது.
மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடைகாண
வேண்டும்.

ஆகவே நன்பா! நீ இன்று இப்போதே நல்லதொரு முடிவெடுக்க
வேண்டும். நீ போகும் பாதையை மாற்றவேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ
உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இது
வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும்,
இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்து
வதற்க்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும்
வீனாக்கி விடாதே!

போதும் நன்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதிக்
கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை..
ஆம்... தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக
மன்னிப்பு கோரிடு அழு, அழு- நன்றாக அழு... உன் இதயச் சுமை
குரையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை
தொழாதிருப்பதில்லை, ஜவேளை ஜமாஅத் தொழுகையை தவற
விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக்கொள்.

தொழுகைகளை முறையாக பேணித் தொழுதவர்களாக மரணிக்க
அல்லாஹ் நம் அனைவருக்கும் வாயப்பளிப்பானாக....

No comments:

Post a Comment