திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்! அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்!!



திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்! அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்!!PrintE-mail



[ இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் 
பெண் தேவை!' என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு 
செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவார்கள்.. அதுபோல் தன் மனைவியும்
 செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த
 நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை 
அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா
 போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்!` 
என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது.
 அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா
 மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் 
சமைக்கணும்' என்று சொன்னால், அவள் கேட்டதும் கெட்ட வார்த்தையை 
கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து 
போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.
"நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை
 இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?', `சரிப்பட்டு வருதான்னு
 பார்ப்போம்' என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் 
அணுகுகிறார்கள்.
"இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர்,
 நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும்
 என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் மீறி ஏகப்பட்ட செலவுடன் திருமணம் நடைபெற்றபிறகு சில்லரை
 காரணங்களுக்காக ''டைவர்ஸ்'' கேட்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.]
அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
அழகு, குடும்பம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும்
 திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள்
நண்பர்களுக்கும், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும்
 உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா!
நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..
` என்று தங்களுக்கும் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து
சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.
. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!' என்று கவலைப்படுகிறார்கள்.
இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து
 நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து
போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு
`குண்டு போடலாம்' என்று பயந்து போயிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
சமூக ஆர்வலர் ஒருவர் சொல்கிறார்...
"இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர்,
நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம்
 செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு
டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்' என்று தூரத்தில் தனிக்குடித்தனம்
 நடத்த நிபந்தனை போடுகிறாள்.
பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க
 வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள்.
அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று
சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால்
கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில்
சமைக்கணும்' என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை
கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல்
செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?`
 என்று கேட்கிறாள்.
இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.
பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கும் பையன் அவன்
.
 அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை
அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை
 பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது கல்யாணம் செய்துகொள்ளேன்'
 என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும்
 வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என்
 சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை
அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான்
 எல்லாம் நடக்கும் என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண்
தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ
தெரியவில்லை..''- என்கிறார், அவர்.
"திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `
சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்
கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா?
அதிகமாக சம்பாதிக்கும் டீ கூட போடத் தெரியாத பெண் தேவையா?`
என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன இப்படி ஒரு கேள்வியை
கேட்டுட்டீங்க?! என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது
 எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால
 வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்`
 என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து
பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக
வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை'
என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா
தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவார்கள்.. அதுபோல் தன் மனைவியும்
செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது
அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார்
 அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள்.
 இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். 


அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம்
போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு
சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன்,
 பெண் இருவரும் செல்ஃபோனில் பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது
 சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே
பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள்
ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம்
 என்று பெண்கள் `ரிஸ்க்' எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம்
முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். இது இன்று பல இடங்களி
 நடக்கும் எதார்த்தமான உண்மை.

இன்றைய பெண்கள் அவர்களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும்
 நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால்,
`உடனே நிறுத்திவிடுங்கள்' என்று உத்தரவிடுகிறாம். பெற்றோருக்கு
அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு,
 நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல்
 போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது.
 இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது
என்று சொல்வதற்கில்லை.
பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட
 நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய
பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு
வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு
`கமிட்மென்ட் ஃபோபியா' என்று பெயர்.
ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை
என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு
`அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?' என்று பெண்வீட்டாரிடம் கேட்கத்
தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை
 நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு
 திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல.
ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான
கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள்
இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள்
. அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை'' -என்கிறார், மனோதத்துவ
ஆலோசகர் ஒருவர்.
o சம்பவம் ஒன்று: 25 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அழகான
இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா
அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை
தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.
"மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது
 நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா
அவளோட திருமண வாழ்க்கை தோல்வியில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு
சொல்லுதாம். அழுறாள்... ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான
 முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது
கல்யாணத்தை நிறுத்திடுங்க!'' என்று அவர் தயங்கித் தயங்கி சொல்கிறார்.
 கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.
o சம்பவம் இரண்டு: இருவரும் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம்
 இருவரும் பார்த்து பேசி `ஓ.கே' சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன் பிறகு இருவரும் செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக
 சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி
அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை
 மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு
தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது
 உன் பொறுப்பு' என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.
மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள்,
`ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும்
என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க!
 நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம்
 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை
பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..?
வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்' என்றாள். அவர்கள்
 இருவருக்கும் செல்ஃபோனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த
கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
o சம்பவம் மூன்று: சென்னையில் உம்ள `காபி டே` ஒன்றில் இரு
 குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிம்ளை பையன் அருகில்
 அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள்
குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன
இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை
எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும்
சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?'
 என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச்
 சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொம்ள முடியவில்லை
 அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு
அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.
தட்டிக்கழிக்க பல காரணங்கள்...
"இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் 
வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு,
மாப்பிம்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே
 போயிருந்தாய்?' என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியும்ளாள். 
`யாருடன் போனாய்?' என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!
இப்படி சில்லரைத்தனமா கேம்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. 
ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்' என்று கூறி திருமணத்தை 
நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைஃப்லேயே 
பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்'. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை' என்கிறார்கள்.
சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக
 இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது.
அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்' 
சொல்லிடுங்க!' என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் 
விதிப்பதால்

30 வயதான பின்பும் மாப்பிம்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாம் அதிகரித்துக்கொண்டே போகிறது'' என்கிறார், ஒரு திருமண தகவல் மையம் நடத்துனர்.
என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்'. யாரும் கேள்விகேட்டால்
 அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம்

"நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை
இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?', `சரிப்பட்டு வருதான்
னு பார்ப்போம்' என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும்
அணுகுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை
நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள்.
 இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின்
வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய
நிலைக்கு பெண்கள் தம்ளப்படுகிறார்கள்.
இதையும் மீறி ஏகப்பட்ட செலவுடன் திருமணம் நடைபெற்றபிறகு சில்லரை
காரணங்களுக்காக ''டைவர்ஸ்'' கேட்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.
* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால்
பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று
 அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
posted by: DULKER ENAYAM 






No comments:

Post a Comment